வீட்டை சுற்றி கள்ளச்சாராய புதையல்...வீட்டுக்குள் கள்ளத்துப்பாக்கி தயாரிப்பு...போலீசாரே அதிர்ந்து போன சம்பவம்

x

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது நெருப்பூர். இந்த ஊரின் மையப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக ஏரியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கள்ளச்சாராயம் காட்சிய வீட்டை போலீசார் சுற்றி வளைத்த நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சிய முருகேசன் தப்பி ஓடினார். வீட்டின் அருகில் சோதனை செய்த போது வீட்டை சுற்றி ஐந்து இடங்களில் குழி வெட்டி கள்ள சாராயம் பகலிலேயே காய்ச்சியது தெரிய வந்தது. வீட்டிற்குள் சென்று சோதனை செய்த போது வீட்டிற்குள், கள்ளத் துப்பாக்கி தயாரித்ததும் தெரிய வந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து சாராய ஊறல்களை அழித்து, காய்ச்ச பயன்படுத்திய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளத்துப்பாக்கிகளையும், அதனை தயாரிக்க பயன்படுத்திய பொருட்களையும் போலீசார், பறிமுதல் செய்துள்ளனர். தப்பி ஓடிய முருகேசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்