சென்னை வாசிகளுக்கு பேரதிர்ச்சி..இடிக்கப்படும் முக்கிய அடையாளம்

x

1991ஆம் ஆண்டு சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில், பிரார்த்தனா என்ற பெயரில் முதல் பீச் டிரைவ் இன் தியேட்டர் உருவாக்கப்பட்டது. காரில் நேரடியாக பிரார்த்தனா தியேட்டருக்குச் சென்று காரில் இருந்தபடியும், பக்கத்தில் நாற்காலியைப் போட்டு அமர்ந்தும், பாயைப் போட்டு படுத்தபடியும், மிகப் பெரிய திரையில் படம் பார்ப்பது சென்னைவாசிகளுக்கு புது அனுபவமாக இருந்தது. ஆனால், கொரோனா காலத்தில் மூடப்பட்ட இந்த திரையரங்கம், கடந்த நான்கு வருடங்களாகவே மூடப்பட்டுக் கிடந்த‌து. இந்நிலையில், அந்த திரையரங்க வளாகத்தை தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. அதில், தியேட்டரை இடித்துவிட்டு வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. சென்னையில் இருந்த ஒரே ஒரு டிரைவ் இன் தியேட்டர் இடிக்கப்படுவது சினிமா ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்