சிக்கிய புலி... உரோமங்களை பிடுங்கி டார்ச்சர் செய்த கிராம மக்கள் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x

பீகாரில் வனத்துறையால் சுட்டு பிடிக்கப்பட்ட புலியின் உடலில் இருந்த உரோமங்களை, கிராம மக்கள் பிடுங்கி செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பாரண் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் 9உயிர்களை கொன்ற புலியை சுட்டு பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில், வனத்துறையினர், போலீசார், கிராம மக்கள் என அனைவரும் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு புலி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பட்டது.

இந்த நிலையில் இறந்த புலியின் உடலில் இருக்கும் உரோமங்களை அப்பகுதியினர் பிடிங்கி செல்வதும்,

அதன் உடலை தொட்டு பார்க்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்