தென்காசியில் சிக்கிய ரூ. 41 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீர்!

x

தென்காசி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 41 லட்ச ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தில் உமிழ்நீரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

செங்கோட்டை விசுவநாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காக திமிங்கல உமிழ்நீர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 41 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீரை பறிமுதல் செய்து, அதனை விற்க முயன்ற தங்கச்சன் அவரது மகன் வர்க்கீஸ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்