மொத்தமாக வாங்கி...சில்லரை விற்பனை... லம்பா மாட்டிய கஞ்சா சாக்லெட் வியாபாரி | TELEGANA | CANNABIS

x

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கைதானவரின் பெயர் முகமது ஜாபர் என்பதும், பீகாரில் இருந்து கஞ்சா அடங்கிய சாக்லேட்களை மொத்தமாக வாங்கி, அதை ஹைதராபாத் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 50 ரூபாய் வரை சில்லரையாக விற்றுவந்தது அம்பலமானது. இதனிடையே, அவர் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா சாக்லெட் பொட்டலங்களை பறிமுதல் செய்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்