தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த டிரான்ஸ்பார்மர் - சென்னையில் பரபரப்பு

x

சென்னை அபிராமபுரத்தில், குடியிருப்புகளுக்கு அருகே இருந்த மின்மாற்றி தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதி பரபரப்பானது.

கொழுந்துவிட்டு எரிந்த மின்மாற்றியால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள், மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து, மின் இணைப்பை துண்டித்து தீயை அணைத்தனர்.

இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதனிடையே, சீரமைப்பு பணிக்காக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்