ரயில் பயணிகள் தாக்குதல் சம்பவம்..வெளிநாட்டில் ஷாருக் சைய்பிக்கு தொடர்பு - வெளியானா அதிர்ச்சி தகவல்..

x

கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் பயணிகள் மீதான தாக்குதல் சம்பவத்தில் என்.ஐ.ஏ. புதிய தகவலை வெளியிட்டுள்ளது. கோழிக்கோடு ரயில் பயணிகள் மீது தீ வைத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் நொய்டாவை சேர்ந்த ஷாருக் சைய்பி கைது செய்யப்பட்டு, என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷாருக் சைய்பியின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஷாருக் சைய்பி தனது செல்போனில் பயன்படுத்திய செயலிகள் மூலம், வெளிநாட்டில் சிலருடன் தொடர்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட தடயங்களை அடிப்படையாகக் கொண்டு, தீவிரவாத தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்