நாட்டை உலுக்கிய ரயில் விபத்து - குடும்பத்துடன் ஊழியர் தலைமறைவு?

x

ஒடிசா ரயில் விபத்து தொடர்பான வழக்கில் தொடர்புடைய சிக்னல் இளநிலை பொறியாளர் குடும்பத்துடன் தலைமறைவானதாக வெளியான செய்தியை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது.ஒடிசாவில் இம்மாதம் 2ம் தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் இதுவரை 291 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்து வழக்கில் தொடர்புடைய சோரா செக்சன் ரயில்வே சிக்னல் ஜூனியர் என்ஜினீயர் குடும்பத்துடன் தலைமறைவானதாகவும், அவரது வீட்டிற்கு சி.பி.ஐ அதிகாரிகள் சீல் வைத்ததாகவும் தகவல் வெளியானது. இதற்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அனைத்து ஊழியர்களும் சிபிஐ மற்றும் சிஆர்எஸ் விசாரணையின் ஒரு பகுதியாக உள்ளனர் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், ஊழியர்கள் யாரும் தலைமறைவாகவில்லை எனவும், தென்கிழக்கு ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்