குடும்ப வறுமையால் வெளியாடு சென்ற மகன் உருக்குலைந்து திரும்பிய சோகம் - ஓடி வந்து கதறிய தாய்

x
  • புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகரை சேர்ந்தவர் சுப்பையா.
  • இவரின் மனைவி அழகி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கட்டிட வேலை செய்து வந்த சுப்பையா சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்திருக்கிறார்.
  • இந்நிலையில், குடும்ப வறுமையின் காரணமாக பஹ்ரைன் சென்ற வீரபாண்டி அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.
  • அப்போது திடீரென அவர் சாலை விபத்தில் சிக்கியதாக தகவல் வந்த நிலையில் பதறிப்போன அவரின் தாய் அழகி, மகனை சொந்த ஊருக்கு அழைத்து வர கடும் போராட்டங்களை முன்னெடுaத்தார்.
  • இதற்காக கடந்த 4 மாதங்களாக அவர் பல துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு அளித்த நிலையில் வீரபாண்டி சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
  • அப்போது மகனின் கோலத்தை பார்த்து கதறிய தாய், தன்னை அடையாளம் தெரிகிறதா என கேட்டு கண்ணீர் விட்டு கதறிய காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது...

Next Story

மேலும் செய்திகள்