சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு நேர்ந்த சோகம் - கேளம்பாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்

x

கேளம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில், பிரியாணி சாப்பிட்ட மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி பெண்கள் விடுதியில், நேற்று பிரியாணி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அனைவரும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதேசமயம் வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சோதனை செய்யப்பட்டு, மீண்டும் விடுதிக்கு அனுப்பபட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மட்டும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது


Next Story

மேலும் செய்திகள்