ராவண வதம் நிகழ்ச்சியில் விபரீதம்! திடீரென விழுந்த உருவ பொம்மை

x

அரியானாவில் ராவண வதம் நிகழ்ச்சி முடிந்த‌தும், எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மை திடீரென விழுந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யமுனா நகர் பகுதியில் பெரும் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில், ராவண வதம் நிகழ்ச்சி நடைபெற்றது. பொம்மை எரிந்து முடியும் சூழலில், அதன் அருகில் சென்று சிலர் அங்கிருந்த பொருட்களை எடுக்க முயன்றனர். அப்போது, திடீரென பொம்மையின் கட்டுமானம், திடீரென சரிந்து விழுந்த‌து. மேலும், வெடிகளும் வெடித்து சிதறியது. இதில், அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்த்தப்பினர். எனினும் சிலர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்