கேரளாவில் படகு போட்டியில் விபரீதம்..பெண்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - நீரில் மூழ்கிய 25 பேர்..

x

கேரள மாநிலம் ஆலப்புலாவில் நடைபெற்ற படகு போட்டியில், பெண்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கேரளா மாநிலம் ஆலப்புழா சம்பக்குளத்தில் பெண்கள் படகு போட்டியின் போது சம்பக்குளம் ஊராட்சிக்குட்பட்ட குடும்பஸ்ரீ உறுப்பினர்கள் சென்ற படகு திடீரென கவிழ்ந்த‌து. இதில், படகில் இருந்த 25 பெண்களும் தண்ணீரில் மூழ்கினர். உடனடியாக அங்கிருந்தவர்கள். தண்ணீரில் மூழ்கியவர்களை பத்திரமாக மீட்டு, கரைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மற்ற படகு போட்டிகள் நிறுத்தப்பட்டது. போட்டியில் பெண்கள் பங்கேற்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் சம்பக்குளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்