நண்பனை நம்பிய மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்..! - வில்லனாய் மாறி நண்பன் செய்த பயங்கரம்

x

மதுரை வாடிப்பட்டி அருகே சட்ட கல்லூரி மாணவரை தாக்கி 8 சவரன் தங்க பறித்த வழக்கில், அவரது நண்பரே திட்டமிட்டு, ஆட்களை அனுப்பி செயின் பறிப்பில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.

மதுரை கான்பாளையம் பகுதியை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவர் பாலாஜி என்பவர் அவரது நண்பருடன் பைக்கில் சென்றபோது, மர்ம நபர்கள் 5 பேர் வழிமறித்து, பாலாஜி அணிந்திருந்த 8 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர். இது தொடர்பான புகாரில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், பாலாஜியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இஸ்மாயில் என்பவரே திட்டமிட்டு, ஆட்களை அனுப்பி செயின் பறிப்பில் ஈடுபட்டது அம்பலமாகியது. இதையடுத்து, 5 இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து, நகையை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்