புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த சோகம் - ஆரணியில் அதிர்ச்சி சம்பவம்

x

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, கழுத்தில் புடவை இறுக்கி 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. ஆரணி அருகே கொங்கராம்பட்டு பகுதியை சேர்ந்த அரிபாபு - விஜயலட்சுமி தம்பதியின் 7 வயதான இளைய மகள் ரூபினா, வீட்டில், புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்பபடுகிறது. அப்போது ஊஞ்சலில் கட்டப்பட்டிருந்த புடவை, ரூபினா கழுத்தில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் விஜயலட்சுமி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, ரூபினாவை, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்