2 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம் - அங்கன்வாடி அருகேயே பலியான சோகம்

x

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, அங்கன்வாடி சென்று விட்டு வீடு திரும்பிய 2 வயது ஆண் குழந்தை, குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு அடுத்த வேம்பி கிராமத்தை சேர்ந்த கேசவன்-கற்பகம் தம்பதியின் 2 வயது மகன் நவீன்குமார், வழக்கம் போல அங்கன்வாடி மையத்திற்கு சென்றுள்ளான். மதிய உணவை வாங்கிக் கொண்டு குழந்தை வீடு திரும்பிய போது, எதிர்பாராத விதமாக அங்கன்வாடி மையத்தின் அருகே உள்ள குளத்தில் தவறி விழுந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் மீட்டு, குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.


Next Story

மேலும் செய்திகள்