திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட விபரீதம்...பறிபோன உயிர்கள் ..நெல்லையில் பரபரப்பு

x

நெல்லை மாவட்டத்தில், திருமணத்தை மீறிய உறவால் மனைவியின் காதலனை வெட்டிய கணவன், பின்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்ட, கூடங்குளம் அருகேயுள்ள ஆறுமுகம்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் நாராயணன். இவரது நண்பர் கிருபாகரன். இந்நிலையில், செந்தில் நாராயணனின் மனைவிக்கும், கிருபாகரனுக்கும் திருமணத்தை மீறய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், செந்தில் நாராயணனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் நாராயணன், கிருபாகரனை அரிவாளால் வெட்டியுள்ளார். இந்த காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த கிருபாகரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் செந்தில் நாராயணனை தேடி வந்த நிலையில், அவர் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்