குளிக்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்..3 நாட்களாக தேடியும்...உச்சகட்ட கவலையில் உறவினர்கள்...

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்த செல்லப்பட்ட மாணவன், 3 நாட்களாக தேடியும் கிடைக்காத‌தால் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். ஓசூரை சேர்ந்த ஜெகதீஸ் என்ற 11ஆம் வகுப்பு மாணவன் 3 நாட்களுக்கு முன்பு கூட்டூர் வனப்பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், மூன்று நாட்களாக தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். ட்ரோன் மூலமாகவும், ஆறு செல்லும் வழியெங்கும் தேடி வருகின்றனர். ஆனால், மாணவனின் நிலை என்ன ஆனது என தெரியாத‌தால் உறவினர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com