பள்ளியில் குழந்தைகளை விட்டு விட்டு திரும்பிய தாய்க்கு நேர்ந்த சோகம்

x

திருப்பூரில் தனியார் பள்ளி வாகனம் மோதி பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையினரை பிரேத பரிசோதனைக்காக உடலை கைப்பற்ற விடாமல் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் பாராபாளையத்தைச் சேர்ந்த ராதா பள்ளியில் குழந்தைகளை விட்டு விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிய போது வாவிபாளையம் செல்லும் வழியில் தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்க முயற்சித்த போது அங்கு திரண்ட ராதாவின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி பேருந்து ஓட்டுநரைக் கைது செய்ய வேண்டும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்