சுவாமியை தரிசிக்க வந்த இடத்தில் சோகம் - கண்ணாடி கிழித்து சிறுவன் படு காயம்

x

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தபோது, கண்ணாடி துண்டுகள் கிழித்து சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. சமயநல்லூரைச் சேர்ந்த கார்த்திக், புனிதா தம்பதி தங்கள் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் கோவிலுக்கு வந்திருந்தனர். மூன்றாம் பிரகாரத்தில் கோவில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தடுப்புகள் வழியாக சுவாமி தரிசனத்திற்கு அவர்கள் உள்ளே நடந்து சென்றபோது, உடைந்து கிடைந்த கண்ணாடி துண்டுகள், அவர்களின் 5 வயது மகன் அகிலேஷ் கையில் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை, ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்