எருமை மாடுகள் லாரிகள் மூலம் கடத்தல்? 4 லாரியை மடக்கி பிடித்த மக்கள் - உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

x

உளுந்தூர்பேட்டை அருகே, கேரளாவிற்கு லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட எருமை மாடுகளை, இந்து மகா சபா நிர்வாகிகள் லாரியோடு தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வழியாக கேரளாவிற்கு எருமை மாடுகள் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில், 4 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட 150 எருமை மாடுகளை இந்து மகா சபா நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்