ஸ்ரீரங்கம் தேருக்கு ஏற்றிய சூடத்தை பூட்ஸ் காலால் அணைத்த டிராஃபிக் இன்ஸ்பெக்டர் -தீயாய் பரவும் வீடியோ

x

திருச்சி ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழாவில் பக்தர்கள் கொளுத்திய சூடத்தை, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் தனது பூட்ஸ் காலால் மிதித்து அணைத்து தள்ளிய சம்பவம் பக்தர்கள் மனதை புண்படுத்தியது. தேரோட்டத்தின் போது, தேங்காய் சில்லுகள் பக்தர்கள் பாதங்களை காயப்படுத்தும் என்பதால், போலீசார் தேங்காய் உடைக்கவும்,சூடமேற்றவும் அனுமதி மறுத்தனர். எனினும், சில பக்தர்கள் அதை காதில் வாங்காமல், சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். இதனைக்கண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் ஆத்திரத்துடன் சூடத்தை பூட்ஸ் காலால் மிதித்து அணைத்து தள்ளினார்


Next Story

மேலும் செய்திகள்