உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியால் திருச்சி-சென்னை சாலையில் போக்குவரத்து நெரிசல் - 2 கி.மீ -க்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

x

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஒரு வழிச்சாலையாக மட்டும் செயல்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

நேற்று திருச்சி-சென்னை சாலையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்