கொடைக்கானலில் தொடர் மழையால் சுற்றுலாப் பயணிகள் அவதி

x

கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அப்ச‌ர்வேட்ட‌ரி, ஏரிச்சாலை, ஆன‌ந்த‌கிரி, மூஞ்சிக்க‌ல், உகார்த்தே ந‌க‌ர், ம‌ன்ன‌வ‌னூர், பூம்பாறை, வில்ப‌ட்டி, அட்டுவ‌ம்ப‌ட்டி, பாறைப்ப‌ட்டி உள்ளிட்ட‌ இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் படகு குழாமில் சவாரி செய்ய சுற்றுலா வளர்ச்சித் துறை தடை விதித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்