குற்றாலத்திற்கு திரண்டு வரும் சுற்றுலாப் பயணிகள்

x

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர். குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். இந்த ஆண்டு சீசன் மிகவும் தாமதமாக தொடங்கியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்நிலையில், இன்று காலையிலும் விட்டுவிட்டு சாரல் மழையுடன் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள், அருவிகளில் உற்சாகத்துடன் குளித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்