யானைகளுடன் பொங்கல் கொண்டாடிய சுற்றுலா பயணிகள்

x

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கோழிக் கமுதி யானைகள் முகாமில் 26 யனைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் யானைகளுடன் இணைந்து பொங்கல் கொண்டாடும் வகையில் வனத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக யானைகளை பிரத்தியேகமாக தயார் படுத்தி வைத்திந்தனர். மேலும், அப்பகுதியில் பழங்குடியின மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இந்நிகழ்வில், சுற்றுலா பயணிகள் யானைகளுக்கு பொங்கல், கரும்பு உள்ளிட்டவை ஊட்டி விட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்