சூறைக்காற்றுடன் பெய்த மழை - சாலையில் முறிந்து விழுந்த மரங்கள்

x

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் இருபதுக்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாலையோரத்தில் இருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் பலத்த சேதமடைந்தன. சாலையோரம் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்