திருச்சியில் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு நாளை நடைபெறும் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி

x

திருச்சியில் தினத்தந்தி மற்றும் இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும், மாணவர்களுக்கான வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.

பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில், திருச்சியில் உள்ள இந்திரா கணேசன் கல்லூரியில், வரும் நாளை - ஏப்ரல் 30ம் தேதி- வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தினத்தந்தி மற்றும் இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். உயர்கல்வி குறித்து பல்துறை சார்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்கள் இதில் உரையாற்ற உள்ளனர். இதில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு டேப், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் ஹெட்செட், சயின்டிஃபிக் கால்குலேட்டர் போன்ற பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்