மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்த பச்சிளம் குழந்தை - காப்பாற்றிய அவசர ஊர்தி ஊழியர்கள்

x

தெலங்கானாவில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்த பச்சிளம் குழந்தையின் உயிரை, அவசர ஊர்தி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு நொடியில் காப்பாற்றும் வீடியோ வைரலாகியுள்ளது. சித்திப்பேட்டை பகுதியில், பிறந்து 23 நாட்களே ஆன குழந்தைக்கு, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தது. தகவலின் பேரில் வந்த அவசர ஊர்தி ஊழியர்கள், சி.பி.ஆர் சிகிச்சை அளித்துள்ளனர். இதன் பயனாக, குழந்தை சில நிமிட சிகிச்சைக்குப் பின்னர் உயிர்த்தெழுந்த நிலையில், அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்