கர்நாடக தேர்தலுக்கு பின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று

x

கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவை கூடுகிறது. 3 நாட்களுக்கு பேரவை கூட்டம் நடைபெறும்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், 135 இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றுள்ள நிலையில், கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது. 25-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பேரவை தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே, புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். சட்டப் பேரவையின் புதிய தலைவர், இந்த கூட்டத்தொடரின் போது தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்