Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.11.2022) | 1 PM Headlines | Thanthi TV

x

"3 நாட்களுக்கு மழை தொடரும்"...தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்...சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு....ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது, சென்னை வானிலை ஆய்வு மையம்.

சென்னையில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு....வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் தகவல்.

சென்னையில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு.....தேங்கும் மழைநீர் உடனுக்குடன் மோட்டார்கள் மூலம் அகற்றப்பட்டு வருவதாக பேட்டி.

சென்னை மாநகராட்சி நீர் நிலைகளில், இரண்டு முதல் மூன்று அடி வரை நீர் மட்டத்தை குறைக்க அறிவுறுத்தல்.....

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நடவடிக்கை..

புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிப்பு.....100 கன அடியில் இருந்து 500 கனஅடியாக உயர்வு.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் கூடுதல் மின் இணைப்புகள்....அரவக்குறிச்சி நிகழ்ச்சியில் ஆணை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்.

இன்று பிற்பகல் திண்டுக்கல்லுக்கு வருகிறார், பிரதமர் மோடி....காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.



Next Story

மேலும் செய்திகள்