காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16-12-2023)

x
  • நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளுக்கு இன்றும் நாளையும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை...சென்னையில் லேசான மழை பெய்யும் எனவும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • கனமழை மற்றும் சூறாவளி எச்சரிக்கை காரணமாக, மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை...மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை...
  • ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்...சென்னை வேளச்சேரியில் உள்ள அஷ்டலட்சுமி நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் நிவாரண நிதி வழங்கும் திட்டம் தொடக்கம்...
  • 6000 ரூபாய்க்கான டோக்கனை பெறுவதற்காக, சென்னை பள்ளிக்கரணையில் கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்...
  • வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி...நிவாரணம் வழங்கியது குறித்து விரிவான அறிக்கையை ஜனவரி 5ம் தேதி தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்