டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட்...நிறைவடைந்த ஏலம்...எந்த அணியில் யார் யார்..?

x

டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 7 வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் மாமல்லபுரத்தில் நேற்று, இன்று என 2 நாட்கள் நடைபெற்றது.

இந்த தொடரில் விளையாடி வரும் சேப்பாக், கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட மொத்தமுள்ள 8 அணிகளும் தங்களுக்கான வீரர்களை ஏலத்தின் மூலம் தேர்வு செய்தனர்.

மேலும் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை அணி மொத்தம் 17 வீரர்களை தேர்வு செய்துள்ளது.

இந்த ஏலத்தில் 21.60 லட்சத்துக்கு சாய் சுதர்சனை கோவை அணி வாங்கிய நிலையில், சஞ்சய் யாதவை 17.60 லட்சத்திற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வாங்கி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்