பேரவையில் கூச்சலிட்ட எம்எல்ஏ.."இங்கே சத்தமெல்லாம் போட கூடாது" கோபமான சபாநாயகர்..கப்சிப்பென்று ஆன அவை

x

சட்டபேரவையில் கேள்வி கேட்க அனுமதி வழங்காததால் கூச்சலிட்ட சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனை சபாநாயகர் அப்பாவு கண்டித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவருமான வேல்முருகன் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்ததால் வேல்முருகன் அவையில் கூச்சலிட்டார். அதற்கு விளக்கமளித்த சபாநாயகர், வேல்முருகனுக்கு கடந்த மார்ச் 24, 28 ,30 ,31 ஆம் தேதிகளில் கேள்வி கேட்கவும் துணை கேள்வி கேட்கவும் அனுமதி வழங்கப்பட்டதாகவும், முக்கிய தீர்மானங்களின் போது கட்சி தலைவர் என்ற அடிப்படையில் தொடர்ந்து பேச அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், எந்த பாகுபாடும் இல்லாமல் தான் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட சபாநாயகர் அப்பாவு, அவையில் பெரிய சத்தம் எல்லாம் போடக்கூடாது என்று எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்