சென்னை தி.நகரில் நடந்த கோர சம்பவம்.. அரசு பெண் ஊழியர் துடிதுடித்து பலி

x
  • சென்னை தி.நகரில் ஆட்டோ மீது பெரிய மரம் ஒன்று விழுந்ததில், அரசு பெண் கணக்காளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
  • தியாகராய நகர் வடக்கு போக் சாலையில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தபோது, 30 ஆண்டுகள் பழமையான மரம் திடீரென விழுந்த‌து.
  • இதில் ஆட்டோ சிக்கிய நிலையில், அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், வாகனத்தை போட்டுவிட்டு தப்பியோடினர்.
  • அதே நேரத்தில், அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோவில், பெண் பயணியும், ஓட்டுநரும் சிக்கினர்.
  • அவர்களை மீட்க முடியாத‌தால், கிரேன் உதவியுடன் மரத்தை அகற்றினர். ஆட்டோ ஓட்டுநர் தப்பிய நிலையில், படுகாயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
  • அவர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கணக்காளராக பணியாற்றும் சூர்யா என்பது விசாரணையில் தெரியவந்த‌து.
  • இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மரத்தின் வேரை வெட்டியதால் விழுந்த‌தா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்