"தமிழகத்தில் உறுதியாகும் XBB வகை கொரோனா" - சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

x
  • தமிழ்நாட்டில் உறுதியாகும் கொரோனா மாதிரிகளில் 83 புள்ளி 6 சதவீதம் XBB வகையை சேர்ந்தது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பிப்ரவரி இரண்டாவது வாரம் முதல் மார்ச் மாதம் வரை சேகரிக்கப்பட்ட 144 மாதிரிகள் மாநில மரபணு பகுப்பாய்வுக் கூடத்தில் பகுப்பாய்வு செய்ப்பட்டது.
  • அதில் 83 புள்ளி 6 சதவீதம் XBB வகையை சேர்ந்தது என உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
  • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன் முதலில் தமிழ்நாட்டில் XBB கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் இது வரை தமிழ்நாட்டில் XBB வகையின் 13 உட்பிரிவுகள் கண்டறியப்பட்டதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
  • XBB வகை கொரோனா பாதிப்புக்கு பெரிய அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படாத காரணத்தால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்