நீண்ட நாட்களுக்கு பின் தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் பலி

x
  • தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த 54 வயதாகும் பார்த்திபன் என்பவர், உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
  • இதையடுத்து, பார்த்திபன், கடந்த 23ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
  • இந்நிலையில், பார்த்திபன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்