"பட்ஜெட்டில் எங்களுக்கான அறிவிப்புகள் இல்லை" - சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு

x
  • தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட்டில் அறிவிப்புகள் இல்லாததை கண்டித்து, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது.
  • இதுகுறித்து சத்துணவு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
  • அதேசமயம் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட, சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
  • இதையடுத்து வரும் ஏப்ரல் மாதம் 3 கட்டங்களாக போராட்டம் நடத்தி முதலமைச்சருக்கு மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்