திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா - ரயில்வே வெளியிட்ட சூப்பர் ஆஃபர்

x

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சென்னை - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் கடற்கரையில் இருந்து வரும் 5 , 6 ,7 ம் தேதிகளில் மூன்று நாட்கள் இயக்கப்படும்.

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் மார்க்கமாக ஒரு ரயிலும், தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக மற்றொரு ரயிலும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, 6,7,8 ம் தேதிகளில் திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்