நிதி நிறுவன பங்குதார‌ர்களிடையே தகராறு - இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. சாலையில் திரண்ட உறவினர்கள் - தி.மலையில் பரபரப்பு

x
  • செய்யாறை சேர்ந்த திருநாவுக்கரசு, அன்பு ஆகிய இருவரும் சேர்ந்த நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.
  • இதில், அன்பு தனியாக தொழில் தொடங்க இருப்பதாக கூறி, திருநாவுக்கரசுவிடம் தனது பங்கு தொகையை திருப்பி கேட்டதாக தெரிகிறது.
  • ஆனால், பணம் முழுவதும் வசூல் ஆன பின்னரே பங்கு தொகையை தர முடியும் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
  • இதனால், அன்பு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருநாவுக்கரசை மிரட்டியதாக கூறப்படுகிறது.
  • இதனால் அச்சமடைந்த திருநாவுக்கரசு, அவரது வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
  • இந்நிலையில், தற்கொலைக்கு தூண்டிய அன்பு மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திருநாவுக்கரசுவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • இதனால் செய்யாறு, ஆற்காடு சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
  • தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்த‌ன் பேரில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்