காங்கிரஸ் சார்பில் திருவள்ளுவர் தின விழா - கர்நாடகாவில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்

x

திருவள்ளுவர் தினத்தையொட்டி, பெங்களூரில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிசார் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெங்களூரு அல்சூர் ஏரி கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை உள்ளது. அங்கு, காங்கிரஸ் சார்பில் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்பட்டது. கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான சித்தராமையா, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரிஸ்வான் அர்சத், ஹாரிஸ், அகண்ட சீனிவாச மூர்த்தி, கே ஜே ஜார்ஜ், உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். அப்போது, பெங்களூரு வாழ் தமிழர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம் ஆடல் பாடல்களுடன் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொங்கல் திருநாளை ஒட்டி அப்பகுதியில் வாழ்த்து கூறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.


Next Story

மேலும் செய்திகள்