"விளையாட சென்ற சிறுவன் குளத்தில் செத்து மிதந்த சோகம்“ - போலீசார் தீவிர விசாரணை | திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்

x
  • மீஞ்சூர் அடுத்த வாயலூர் குப்பத்தை சேர்ந்த குமார், வருவாய்த்துறையில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
  • இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
  • 10 வயது மகன் மோனீஷ், அருகில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தான்.
  • சைக்கிளுக்கு பஞ்சர் போட வேண்டுமென கூறிவிட்டு சென்ற மோனீஷ், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
  • இதையடுத்து, தனது மகனை காணவில்லை என அவரது தந்தை, காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
  • இந்நிலையில், வாயலூரில் உள்ள குளத்தில் சிறுவன் மோனீஷ் சடலமாக கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரின் பேரில், காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • விளையாட சென்ற சிறுவன் குளத்தில் தவறி விழுந்தானா? குளிக்க சென்றபோது குளத்தில் உள்ள சேற்றில் சிக்கி உயிரிழந்தானா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்