கேபிள் வயரில் பாய்ந்த மின்சாரம்... துணி காய வைக்கும் போது பெண் பலி

x
  • திருவள்ளூர் மாவட்டம் வரதாபுரம் கிராமத்தில் வசிக்கும் நாகராஜ் என்பவர் மனைவி கீர்த்தனா.
  • இவர் சனிக்கிழமை மாலை துணி துவைத்து விட்டு அதனை காய வைப்பதற்காக கொடியில் போட்டுள்ளார்.
  • அப்போது கேபிள் டிவி ஒயரிலிருந்து மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே கீர்த்தனா உயிரிழந்தார்.
  • இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் போலீசார், கீர்த்தனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • இத்தகைய கோர சம்பவம் நடைபெற்றதற்கு அரசு கேபிள் ஆபரேட்டர் வெங்கடேசனின் அலட்சியமே என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்