"யார் வண்டி மேல மோதுற".. கார் மீது வேன் மோதி விபத்து.. ஒட்டுநர்களுக்கிடையே கடும் வாக்குவாதம்

x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கார் மீது வேன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், ஓட்டுநர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதால், சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழவேற்காட்டில் இருந்து கன்னிகைப்பேர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு ஆட்களை ஏற்றி கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, கள்ளுக்கடைமேடு அருகே வேன் சென்ற போது, முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த தனியார் நிறுவன பெண் தொழிலாளர்களுக்கு சிறு காயம் ஏற்பட்ட நிலையில், இரு வாகன ஓட்டுநர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்