கொதிக்கும் வெந்நீரில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை... துடிதுடித்து பலி..! திருவள்ளூர் அருகே சோகம்

x

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் கிராமத்தில் வெந்நீரில் தவறி விழுந்த ஒன்றை வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10 ஆம் தேதி குளிப்பதற்காக வெந்நீர் வைத்த நிலையில், அதில் சிறுவன் அஜ்மீர் தவறி விழுந்துள்ளான். சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டு, பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுவன் அஜ்மல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான் . இந்த சம்பவம் குறித்து

ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்