வேலை பார்த்த கடையிலேயே கைவரிசை... சிக்கிய 30 லட்சம் மதிப்பிலான சிகரெட் பண்டல்கள் - சிசிடிவியில் வசமாக சிக்கிய ஊழியர்கள்

x
  • அவிநாசி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வந்த நிலையில், பிரபாகரன் மற்றும் சம்பத்குமார் ஆகியோர் இவரது கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
  • இந்நிலையில், கடையில் உள்ள சிகரெட் பண்டல்களை தினமும் சரிபார்க்கும் போது எண்ணிக்கை குறைந்து காணப்படுவதை கண்டு கருப்பையா சந்தேகமடைந்துள்ளார்.
  • இதையடுத்து, கடையில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது, கடைஊழியர்களான பிரபாகரன் மற்றும் சம்பத்குமார் ஆகிய இருவரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
  • இதையடுத்து, இருவர் மீதும் கருப்பையா போலீசில் புகாரித்த நிலையில், இருவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
  • விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்