திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்... சினிமா பாணியில் ஓட்டுநரை கடத்திய கும்பல் - பெண்ணின் சகோதரர்கள் அரங்கேற்றிய பயங்கரம்

x
  • பல்லடம் அடுத்த அருள்புரம் பகுதியை சேர்ந்தவர் தனியார் பேருந்து ஓட்டுநர் ஈஸ்வரன்.
  • இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில், பேருந்தில் தினமும் பயணித்து வந்த திருமணமான பெண் ஓருவருடன் ஈஸ்வரன் பழகி வந்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் சகோதரர்கள் ஈஸ்வரனை கண்டித்துள்ளனர்.
  • இந்நிலையில், பல்லடம் அருகே ஈஸ்வரனை காரில் கடத்திய 6 பேர் கொண்ட கும்பல், அவரை பொள்ளாச்சியில் உள்ள மலைப்பகுதியில் வைத்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
  • இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈஸ்வரன் போலீசில் புகாரளித்தார்.
  • இதனடிப்படையில், விசாரணை நடத்தி வந்த போலீசார், செஞ்சேரி மலை பகுதியை சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்