திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் தாறுமாறாக வேன் மீது மோதல்.. நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி

x
  • திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பு மற்றும் மினிவேன் மீது மோதி விபத்தில் சிக்கியது.
  • மங்கரசுவளையபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன்.
  • இவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, மூவாயிரம் ரூபாய் பாக்கி வைத்ததாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில், குமரேசனை வழி மறித்த நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • அப்போது, முருகேஷ் என்ற நிதி நிறுவன ஊழியர், பணத்திற்கு பதிலாக லாரியை எடுத்துக்கொண்டு அதிவேகமாக புறப்பட்டுள்ளார்.
  • இதில், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பின் மீது ஏறி, மினி வேன் மீது மோதி விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக லாரி வருவதை கண்ட மக்கள், உடனடியாக சுதாரித்துக்கொண்டு ஒதுங்கி ஓடியாதல் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்