மனைவியை வைத்து ஆபாச வீடியோ - ரூ.100 கோடி தங்கப் புதையலுக்கு ஆசைபட்டு ஆபத்தில் சிக்கிய கணவன்!

x
  • புதையலை எடுத்து தருவதாக தன்னிடம் 25 லட்சம் மோசடி செய்த நபர், மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டுவதாக, திருப்பூர் தொழிலதிபர் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
  • திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வரும் முருகேசன் என்பவரும், அவரது மனைவியும் குடும்ப தகராறால் தனித்தனியே வசித்து வருகின்றனர்.
  • இந்தநிலையில் முருகேசனின் நண்பரான கிருஷ்ணராஜ், முருகேசனின் தோட்ட வீட்டில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப் புதையல் இருப்பதாகவும், அதை எடுத்துவிட்டால் இருவரும் சேர்ந்து வாழலாம் எனவும் கூறியதாக கூறப்படுகிறது.
  • இதனையடுத்து முருகேசன் கிருஷ்ணராஜூக்கு 25 லட்சம் ரூபாய் அளித்ததாக தெரிகிறது.
  • ஆனால் கிருஷ்ணராஜ் புதையலை எடுத்து தராமல் இருந்ததாகவும், இதனால் முருகேசன் பணத்தை திரும்ப கேட்டதாகவும் கூறப்படுகிறது.
  • அப்போது கிருஷ்ணராஜ், முருகேசனின் மனைவியின் புகைப்படத்தை, ஆபாச வீடியோவாக மார்பிங் செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது.
  • இதனையடுத்து முருகேசன், கிருஷ்ணராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்