பிறந்து 7 நாளே ஆன ஆண் குழந்தை... பேக்கில் எடுத்து சென்ற பெண் - 12 மணி நேரத்தில் தாயிடம் திரும்பிய குழந்தை

x
  • திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடத்தப்பட்ட பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தையை, போலீசார் பத்திரமாக மீட்டனர்.திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபி என்பவரது மனைவி சத்யாவுக்கு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 19ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
  • அந்தக் குழந்தையை உறவினர்களுக்கு தெரியாமல், அருகில் இருந்த பெண் ஒருவர், கடத்திச் சென்றார்.
  • இதுதொடர்பான புகாரின் பேரில், மருத்துவமனைக்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
  • அதனைத் தொடர்ந்து, காவல்துறை துணை ஆணையர் வனிதா தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், 12 மணி நேரத்தில் குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
  • குழந்தையை கடத்திய பாண்டியம்மாள் என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்