"காதலித்து கர்ப்பமாக்கி கழற்றிவிட்ட போலீஸ் காதலன்" நியாயம் கேட்டு போராடிய காதலி மீது சரமாரி தாக்குதல்.! - அதிர்ச்சி வீடியோ

x

ஆம்பூர் அருகே ஏமாற்றிவிட்ட காதலன் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணை, காதலனின் உறவினர்கள் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கீழ்முருங்கையை சேர்ந்த ஜெயகணேசனும், ரம்யா என்பவரும் காதலித்து, 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ஜெயகணேசன் ஆவடியில் காவலராக பணியில் சேர்ந்த நிலையில், கடந்த ஆண்டு வேரு திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், கீழ்முருங்கைக்கு வந்த‌தை அறிந்த ரம்யா, அவரது வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாகவும், கர்ப்பத்தை கலைத்துவிட்டதாகவும் புகார் தெரிவித்தார். அதே நேரத்தில், ஜெயகணேசனின் உறவினர்கள் ரம்யாவை தாக்கியுள்ளனர்.

தகவலறிந்து சென்ற போலீசார், ரம்யாவிடம் விசாரித்து, தலைமறைவாக உள்ள ஜெயகணேசனை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்